யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த வாகன பரிசோதனை நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் இடம்பெற்ற வாகன பரிசோதனை நிகழ்வில் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணவில் வாகன பரிசோதனை நிகழ்வில் கலந்துகொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வாகனங்களை பரிசோதித்தார்.
பொலிஸ் திணைக்களத்தினால் வருடம்தோறும் பொலீஸ் நிலையங்களில் அணிவகுப்பு பரிசோதனை மற்றும் வருடாந்த வாகன பரிசோதனைகள் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் வாகன பரிசோதனை நிகழ்வு இன்றுகாலை தற்போதைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு ஒன்றுகூடல்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்